இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2014ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதி போட்டிகள்!!(படங்கள்)

479

இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2014ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள் நேற்று (07.02) வவுனியா நகரசபை மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் திருமதி சரோஜினி தர்மகுலசிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , திரு.MP.நடராஜ் , இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு.வையாபுரிநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் பாடசாலை மாணவிகளால் தமிழில் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும் .

விதுரர், துரோணர், பீஷ்மர் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையிலான இறுதிப்போட்டியில் விதுரர் இல்லம் 1ம் இடத்தையும், துரோணர் இல்லம் 2ம் இடத்தையும், பீஷ்மர் இல்லம் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

1ம் 2ம் 3ம் இடம் பெற்ற அணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வெற்றிக் கேடயத்தை வழங்கி வைத்தார்.

இவ் வருடத்துடன் தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் பாடசாலையின் அதிபர் திருமதி.சரோஜினி தர்மகுலசிங்கம் அவர்களுக்கு பாடசாலை சார்பாக நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டது. நினைவுச்சின்னத்தை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கினார்.

-மகிந்தன்-

c1c2c3c4c5c6c7c8c9c10c11