பேருந்துகளில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!!

770

பேருந்துகளில்…

இலங்கையில் மக்களுக்கு பொருத்தமான சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக பொருத்தமான சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய சொகுசாக பயணிகள் பயணிக்க கூடிய பேருந்துகளை எதிர்வரும் நாட்களில் கொள்வனவு செய்யும் போது அதனை கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழுவினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை மேலும் ஆராய்ந்த பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சர்கள் அடங்கிய துணைக்குழுவுக்கு இன்று அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் தனியார் மற்றும் அரச பேருந்துகள் 26985 உள்ளதாக இதன் போது தெரியவந்துள்ளது.

இவற்றில் பல பேருந்துகள் பொருட்கள் போக்குவரத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள லொரி செஸி வாகனகளே உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக வாகனத்தில் பிரேக் அழுத்தும் போது அதில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.