கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து : ஆபத்தான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

755

கோர விபத்து..

கொழும்பு – பம்பலப்பிட்டி, தும்முல்ல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இன்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். விபத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிபென்டர் ரக வாகனமும், மோட்டார் கைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.