இரணைமடு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

1313

புகையிரத விபத்தில்..

கிளிநொச்சி – இரணைமடு சேவைச்சந்தை அருகே இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெறுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் கிளிநொச்சி – பொன்னகர் பகுதியை சேர்ந்த தர்ஷன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த நபர் இரணைமடு சேவைச்சந்தைக்கு அருகாமையில் உள்ள தவறணையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.