உயிருக்கு உயிரா காதலிச்சோம்… அவளை எ ரித்தே கொ ன்று வி ட்டார்கள் : க ண்ணீர்விடும் இளைஞன்!!

2140

உயிருக்கு உயிரா காதலிச்சோம்…

தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே காதலுக்கு எ திர்ப்பு தெரிவித்து தனது கா தலியை பெண்வீட்டார் ஆ ணவகொ லை செ ய்து எ ரித்துவி ட்டதாக கூறி கா தலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியைச் சேர்ந்த 20 வயதான விவேக் திருவரங்குளம் அருகே இடையன்வயலைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரியை(19) கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

விவேக்கும், சாவித்திரியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டுக்கும் தெரியாமல் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்களது காதல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்கு தெரிந்ததால் அவரது தாயார் மற்றும் அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து சாவித்திரிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளையை பார்த்து பேசி முடித்ததாக கூறப்படுகின்றது.

இது பிடிக்காத சாவித்திரி விவேக்கிடம் அலைப்பேசியில் தொடர்புகொண்டு தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்றும் தன்னை உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து விவேக்கும் சாவித்திரியும் கோயம்புத்தூருக்கு செல்ல திட்டமிட்டு ஒரு வாடகை காரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரக சியமாக புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் செல்லும் வழியில் குளித்தலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது விவேக்கும் சாவித்திரியும் சென்ற காரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

இதில் சாவித்திரியும் விவேக்கும் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறியுள்ளனர். பொலிசார் இருவரது வீட்டிலும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குளித்தலை காவல் நிலையத்திற்கு வரும்படி கூறி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி விவேக் மற்றும் சாவித்திரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த காவல்துறையினர் விவேக்கிற்கு 21 வயது முழுமையாக நிறைவடையாததால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் அதனால் சாவித்திரியை பெற்றோரிடம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அதற்கு சாவித்திரி ம றுப்பு தெரிவித்ததாகவும் தன்னை காப்பகத்திற்கு அனுப்பும் படி கூறியதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து பொலிசார், விவேக் இன்னும் நான்கு மாதங்களில் திருமண வயதை எட்டி விடுவார் அதுவரை சாவித்திரியை எந்த ஒரு து ன்புறு த்தலும் செ ய்யக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு சாவித்திரியை அவரது பெற்றோரிடம் அனுப்பியதாக கூறப்படுகின்றது.

இதனிடையே, கடந்த 10ஆம் திகதி சாவித்திரிக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட அறந்தாங்கியை சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் சாவித்திரி வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரிடம் உங்கள் சம்பந்தம் வேண்டாம் என்று கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விவேக்கின் உறவினர்களுக்கு இடையன்வயல் பகுதியிலிருந்து சாவித்திரி உயிரிழந்து விட்டதாகவும் இரவோடு இரவாக சாவித்திரியின் உறவினர்கள் உ டலை எ ரித்து இ றுதி ச டங்குகளை முடித்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

இதில் ச ந்தேகம டைந்த விவேக்கின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் ஒன்றினை கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், சாவித்திரியின் ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாகவும், காதலுக்கு எ திர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் காதலரை விட்டு பிரித்து கூட்டி வந்து ஆ ணவ கொ லை செய்துவிட்டு யாருக்கும் தகவல் சொல்லாமல் எ ரித்து வி ட்டதாகவும் இதை சாதாரண வழக்காக பார்க்காமல் ஆ ணவ கொ லையாக இருக்கலாம் என்ற கோ ணத்தில் வி சாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.