8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள Norfolk என்ற நகரத்தில் நடந்த ஆய்வில் 1.2 மில்லியன் ஆண்டுகள் முதல் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் காலடி தடங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பல்வேறு வடிவங்களில் இந்த கால்தடங்கள் கிடைத்துள்ளன. அதை வைத்து பார்க்கும்போது, அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதன் 1.7 மீட்டர் உயரம் வரை இருந்துள்ளான் என தெரிய வருகிறது.
ஆய்வாளர்கள் அந்த கால்தடங்களை புகைபடங்கள் எடுத்து அதன்மூலம் ஒரு 3D படத்தை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பல கால்தடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.