இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் நேற்று கடலில் அ டித்துச் செல்லப்பட்ட இளைஞன்!!

3010

இன்று திருமணம்..

களுத்துறை கட்டுகுருந்த கடலில் குளிக்க சென்ற இளைஞர்கள் 6 பேரில் ஒருவர் கா ணாமல் போயுள்ளார். இன்றைய தினம் திருமணம் செய்வதற்கு ஆயத்தமாக இருந்த இளைஞனே இவ்வாறு கா ணாமல் போயுள்ளார்.

களுத்துறை ரஜவத்தை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய லஹிர கசுன் நேற்று கட்டுகுருந்த கடலுக்கு 5 நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருந்த லஹிரு திடீரென கடலில் மூழ்கி கா ணாமல் போயுள்ளார்.

தங்கள் நண்பர் கடலில் விழுந்து கா ணாமல் போயுள்ளதாக லஹிருவின் நண்பர் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்து தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய களுத்துறை பொலிஸார் இலங்கை கடற்படைக்கு இது தொடர்பில் அறிவித்த பின்னர் லஹிருவை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.