எங்கள் அந்தரங்க உரிமையை பாதுகாக்க உதவிடுங்கள் : நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பில் கோரிக்கை!!

2901


நடிகர் சுஷாந்த்



ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது சுசாந்த் சிங் ராஜ்புத்தின் ம ரணம். எம்எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சுசாந்த்.



34 வயதேயான சுசாந்த், பொறியியல் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சின்னத்திரை தொடர்களில் நடித்தார். இதன்மூலம் பாலிவுட் பட உலகில் நுழைந்தவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன.




வெற்றிகள், தோல்விகள் என ஒரு சேர ருசித்த சுசாந்த், கடந்த ஐந்து மாதங்களாகவே தீவிர ம ன அ ழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதற்காக மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும் கடந்த 10 நாட்களாக யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.


சம்பவ தினத்தன்று காலை 10 மணிக்கு அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டவர் நீண்ட நாட்களாகியும் வரவில்லை. அதன்பின்னர் பொலிசின் உதவியுடன் உள்ளே சென்ற போது தூ க்கில் தொ ங்கிய நிலையில் பி ணமாக கி டந்துள்ளார்.

பி ரேத ப ரிசோதனை நிறைவடைந்த நிலையில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சுசாந்தின் அலுகலத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,


சுஷாந்த் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பது மிகுந்த வ லியை ஏற்படுத்துகிறது. அவரது ரசிகர்களாகிய நீங்கள் இத்தனை நாட்களும் செய்தது போலவே அவரை உங்கள் நெஞ்சில் நிறுத்தி அவரது வாழ்வையும், பணியையும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தத் துயர்மிகு நேரத்தில் எங்கள் அந்தரங்க உரிமைகளைப் பாதுகாக்க எங்களுக்கு உதவுமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்”.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.