இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!!

944

எச்சரிக்கை..

எந்த ஒரு காரணத்திற்காகவும் இலங்கை கடல் எல்லை சட்டவிரோதமாக மீறி வர வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தினால் அனைத்து சட்டவிரோத குடியேறிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில் உள்ள நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் கடல் வழியாக தப்பி வருவதற்கு பலர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இணையம் ஊடாக தெளிவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வரையிலும் வடக்கு பிரதேசங்கள் பலவற்றில் கடற்படையினர் பாதுகாப்பினை தீவிரப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்குள் எவ்வித சட்டவிரோத குடியேறிகளும் நுழையாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பை கண்டுக்கொள்ளாமல் இலங்கை கடல் எல்லையை மீறி வருபவர்களை சர்வதேச கடல் எல்லைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.