அடுத்த மாதம் ஆரம்பமாகும் விமானப் பயணங்கள்!!

3891

விமானப் பயணங்கள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை மீண்டும் திறப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் அரசாங்கம் தீர்மானித்துள்ள காலப்பகுதியை விடவும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் விமான பயணங்கள் ஆரம்பமாகும் என நம்பபப்டுகிறது.

எதிர்வரும் ஜுலை மாதம் மத்திய பகுதியில் இலங்கைக்கான விமான பயணங்களை ஆரம்பிப்பதற்கு தயார் என அனைத்து விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் விமான நிலையத்தை திறப்பதற்கு தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 60க்கும் அதிகமாக விமான நிறுவன பிரதிநிதிகள் ஜுலை மாதம் 15ஆம் திகதியளவில் இலங்கைக்கு விமான பயணங்களை ஆரம்பிப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர். கடந்த வாரம் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு விருப்பம் வெளியிடப்பட்டுள்ளது.