மின்சார பட்டியல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட தகவல்!!

3120

மின்சார பட்டியல்..

கடந்த சில மாதங்களாக மின்சார பட்டியலில் சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விளக்கம் கோரியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். மக்களுக்கான மின்சார நிவாரணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நிலைமையை தெளிவுப்படுத்திய மின்சார சபை தலைவர் விஜித ஹேரத், கொரோனா தொற்றின் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு சரியான மின்சார பட்டியலே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையினால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் ஒரு போதும் நிறுத்தப்படாதென அவர் கூறியுள்ளார்.