இலங்கையில் இருந்து பயணித்தவருக்கு கொரோனா : திருப்பி அனுப்பிய டோஹா!!

689

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட பயணி ஒருவர் இன்று அதிகாலை கட்டார் நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர் இந்திய நாட்டு மாலுமி என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாலுமிகள் உட்பட 65 பேர் வருகைத்தந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் கப்பல்களில் சேவை செய்வர்களாகும். அவர்களில் 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கட்டாருக்கு சென்றுள்ளனர். அவ்வாறு சென்ற 15 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக டோஹாவில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

அதற்கமைய அவர் அந்த நாட்டிற்கு சென்ற விமானத்திலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவ்வாறு வந்த இந்திய நாட்டு மாலுமி கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.