இலங்கையில் மீண்டும் கொரோனா தலைதூக்கினால் தேர்தல் நடக்குமா?

1119

மீண்டும் கொரோனா தலைதூக்கினால்..

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்டால் குறித்த திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்பதைத் தேர்தல்கள் ஆணைக்குழுதான் முடிவெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை ஏற்படாமல் தடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசும், சுகாதாரப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, மக்கள்தான் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை, கொரோனாவைக் காரணம் காட்டிப் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைக்க முடியாது எனவும்,

தேர்தலைப் பாதுகாப்பான முறையில் நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க அரசு தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தான் நேரில் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.