யாழில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி!!

750

கோர விபத்து..

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உசன் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றொருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி தற்போது கொடிகாமம் பொலிஸில் சரணடைந்துள்ளார். மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.