பிரதமருக்கு ஐயாயிரம் ரூபாவை அனுப்பி வைத்தவருக்கு கிடைத்த வாய்ப்பு!!

3243

எஸ்.பி.ஹேவாஹெட்ட..

மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராம சங்க உறுப்பினர் எஸ்.பி.ஹேவாஹெட்ட (வயது 86) அண்மையில் அலரி மாளிகைக்கு ஐயாயிரம் ரூபா பணத்தாள் சகிதம் கடிதமொன்றை அனுப்பி வைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் குறித்த பணமும், கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனை ஹேவாஹெட்ட, நேற்று (20.06.2020) முற்பகல் தமது கைகளினாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

ஒரு மூத்த குடிமகனாக சமூக பொறுப்பை ஏற்று குறித்த பணத்தை அனுப்பி வைத்த ஹேவாஹெட்டவின் தாராள மனப்பான்மையை கௌரவிக்க வேண்டுமென கருதிய பிரதமர், ஹேவாஹெட்டவின் கைகளினாலேயே அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்யுமாறு பிரதமரின் செயலாளர் காமினி செனரத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளான நேற்றுமிரிசவெட்டிய புனித பூமியில் இடம்பெற்ற தானம் வழங்கும் நிகழ்வின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் குறித்த நிதியை கொவிட் – 19 நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் நேரில் கையளிக்கும் வாய்ப்பு ஹேவாஹெட்டவிற்கு கிடைத்துள்ளது. இதன்போது, ஹேவாஹெட்டவின் குடும்பத்தாரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.