கிளிநொச்சி விபத்தில் வவுனியா நபர் மரணம்!!

532

Accdentவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் தரித்து நின்றுகொண்டிருந்த லொரியின் மீது மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வவுனியா குட்செற் வீதியைச் சேர்ந்த கந்தையா ரகுநாதன் (44) என்பவர், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில், கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு சந்திப் பகுதியில் அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்தில் தரித்து நின்றிருந்த லொரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. சம்பவத்தில் கந்தையா ரகுநாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.