வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய பெருவிழா!!

315

vavuniya

வவுனியா பிரதேச செயலகத்தின் கலை இலக்கியப் பெருவிழா நேற்று (08.02) வவுனியா நகர கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் இடம்பெற்றது.

பல கலை கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு க.கந்தசாமி குருக்களின் யோகாசன புகைப்படக் கண்காட்சியும் வவுனியா பிரதேச ஓவியரின் சித்திரக் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை பிரதேச செயலகத்தின் கீதம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திரவிடம் உத்தியோகபூர்வமாக கலாநிதி அகளங்கன் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் வழங்கி வெளியிட்டு வைத்திருந்தனர்.

அத்துடன் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் வவுனியா மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்டு கலாபூசணம் மற்றும் ஆளுனர் விருது பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் வவனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன், வவுனியா தெற்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா, வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி பராசக்தி கணேசலிங்கம், வவுனியா தெற்கு பிரதேசசபையின் செயலளார் சுகந்தி கிசோர், ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர், வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் எஸ்.இராசலிங்கம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் பாடசாலை மாணவாகள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.