கொழும்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 93 பிச்சைக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் விசேட நடவடிக்கையின்போது, கோட்டை, கொம்பனித் தெரு, விஹாரமாதெவி பூங்கா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்கள் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.