மாணவி ஒருவரை பாடசாலை விடுதிக்குள் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ – தோனிகல பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மாணவி 10ம் தரத்தில் கல்வி பயின்று வருவதுடன் கைது செய்யப்பட்ட 18 வயதுடைய சந்தேகநபர் அதே பாடசாலையில் 12ம் தரத்தில் கல்வி பயில்வதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சில வாரங்களுக்கு முன்னரே இவ்விருவரிடையே காதல் மலர்ந்துள்ளதாக தெரியவருகிறது. தனியார் வகுப்புக்குச் செல்லும் வேளை இவ்விருவரும் பாடசாலை விடுதிக்குள் சென்றுள்ள போது இந்த வல்லுறவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் பின் மாணவி தனது மாமாவிற்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பின் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவி மீட்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மாணவி வைத்திய பரிசோதனைக்கென ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.