நோயாளர் காவு வண்டியுடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி!!

789

விபத்தில்..

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின், இருதயபுரம் பகுதியில் நோயாளர் காவு வண்டியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி நேர்ந்த விபத்தில் இளைஞரொருவர் உயிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முகம்மட் அஹ்ஸான் (25 வயது) என்பவரே பலியாகியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி நோயாளர்களை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மீண்டும் வைத்தியசாலைக்கு திரும்பிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய நோயாளர்காவு வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.