வவுனியா வளாகத்தினால் பல கற்கை நெறிகள் நிறுத்தப்பட்டமை தொடர்பில் வன்னி கல்வியிலாளர்கள் விசனம்!!

309

Vavuniyaவவுனியா வளாகத்தினால் பல கற்கை நெறிகள் நிறுத்தப்பட்டது தொடர்பில் வன்னி கல்வியிலாளர்கள் விசனம்

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினால் நடத்தப்பட்டு வந்த பல்வேறு கற்கை நெறிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வன்னி கல்வியியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையி்ல் ..

வவுனியா வளாகத்தினால் பட்டமேற்படிப்புகள், ஆங்கில டிப்ளோமா, சமூக அபிவிருத்தியும் முகாமைத்துவமும் டிப்ளோமா ஆகிய பாடநெறிகள் உட்பட சில பாடநெறிகள் யுத்தகாலத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் இதன் மூலம் பல வன்னி பிராந்திய மாணவாகள் பயனடைந்திருந்தனர்.

எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கல்வி வாய்ப்புக்காக காத்திருக்கும் வன்னி பிராந்திய மாணவாகளின் கல்வி செயற்பாட்டை மழுங்கடிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தினால் இப் பாடநெறிகளுக்கான சந்தர்ப்பங்கள் வவுனியா வளாகத்திற்கு வழங்கப்படாமையினால் உயர்தர பரீட்சையை சித்தியடைந்த மாணவர்கள் உட்பட பட்டதாரிகளும் தமது மேற்படிப்பை வவுனியா வளாகத்தில் மேற்கொள்ளமுடியாதுள்ளனர்.

குறிப்பாக ஆங்கல டிப்ளோமா கற்கை நெறியில் கற்ற பல மாணவர்கள் இன்று ஆசிரியர்களாக உள்ளனர். எனினும் தற்போது அவ் வாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளதுடன் வேறு பாடநெறிகளும் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வன்னி பிராந்தியத்தின் கல்வி செயற்பாட்டின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாகவே எண்ணத்தோன்றுவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.