பேருந்துகள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்துள்ள வி பரீதம்!!

1545

விபத்து..

ஹட்டனில் தனியார் பேருந்தை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தினை, கினிகத்தேனையில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து முந்திகொண்டு செல்லமுற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் எற்படவில்லையென ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதனால் ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கண்டி மற்றும் ஹட்டன் – கொழும்பு ஆகிய வீதிகளின் போக்குவரத்து சில மணிநேரம் பா திக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஆகியோருக்கு இடையில் வா ய்த்த ர்க்கம் ஏற்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் இரண்டு பேருந்துகளினதும் சாரதிகளுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.