பிரித்தானியாவுக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு!!

316

Britanபிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய அரசிடம் இழப்பீடு கோரி அநகாரிக தர்மபாலவின் பரம்பரையினர் என்ற அமைப்பு வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.

இது சம்பந்தமாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

1818 ஆம் ஆண்டு ஊவா – வெல்லஸ்ஸ புரட்சியின் போது நாட்டுக்காக உயிர் நீக்க 158 பேரை தேசிய வீரர்களாக அறிவிக்க கலாசார அமைச்சு எடுத்துள்ள முடிவுக்கும் எமது அமைப்பு நன்றி தெரிவிக்கின்றது.

பிரித்தானியர் இலங்கையில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அந்த நாடு இழப்பீடுகளை வழங்கவில்லை என்பதுடன் மன்னிப்பும் கோரவில்லை.

பிரித்தானியரின் காணி சட்டம் காரணமாக மலையகத்தில் வாழும் சிங்களவர்களின் காணிகள் பறிபோயுள்ளன. சிங்களவர்கள் பிணத்தை புதைக்கக் கூட காணிகளை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக இன்னும் அபிவிருத்தியடையாத பிரதேசமாக சில மலையக பிரதேசங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.