வவுனியா வாடிவீட்டு உரிமையாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!!

385

Attackவவுனியா வாடிவீட்டின் உரிமையாளரான மாரிமுத்து கதிர்காமராசா மீது நேற்று (09.02) இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நகர்ப்பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவர் மீது வீட்டின் முன்னால் வாகனத்தில் நின்றவர்கள் மோதியுள்ளனர். இதனையடுத்து மோதியமை தொடர்பாக அவர்களிடம் கதிர்காமராசா காரணம் கேட்டபோது திடீரென இருவர் அவர் மீது கத்தியால் வெட்டியும் தடியால் அடித்தும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பி ஓடியுமுள்ளனர்.

அதனையடுத்து படுகாயமடைந்தவரை அயலில் உள்ளவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.