முல்லைத்தீவில் இரு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி!!

1400

இரு பிள்ளைகளின் தந்தை..

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட ”நேசன் குடியிருப்பு” 01ஆம் வட்டாரத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக ப லியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று (29-6-2020) காலை நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பில் கடும் வறட்சி நிலவு காரணமாக மக்களின் கிணறுகளில் நீர் வற்றி காணப்படுகின்றது. இந்நிலையில் வீட்டு கிணறு ஒன்றினை ஆழப்படுத்துவதற்காக இன்று காலை கிணற்றுக்குள் இறங்கிய இருவர் அமுக்கம் அமுக்கி மயங்கியதில் ஒருவர் உ யிரிழந்துள்ள நிலையில் மற்றும் ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பு 01 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த செ.திலகச்செல்வன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

24 வயதுடைய ஆ.ரதுர்யன் என்ற இளைஞன் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து குடிதண்ணீரினை பெற்றுக்கொள்வதக்காக கிண்ற்றினை மேலும் ஆழப்படுத்த முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.