யாழில் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தாயும், பிள்ளையும் வைத்தியசாலையில்!!

827

யாழில்..

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் இன்று (01.07.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும், பிள்ளையும் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். கிட்டுப் பூங்காவில் இருந்து கச்சேரி நோக்கி வந்த வங்கி முகாமையாளர் ஒருவரின் கார், மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த தாயும், பிள்ளையும் தூக்கி வீசப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளனர். எனினும் மோட்டார்சைக்கிளில் மோதிய காரானது தொடர்ந்து வீதியோரமாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடனும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த தாயும், பிள்ளையும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.