ஒருகோடி பெறுமதியான ஹெரோயினை ஆரஞ்சுப் பழத்திற்குள் வைத்து கடத்தியவர் கைது!!

464

Orangeபாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்தி வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரஞ்சு பழத்தை பிளந்து அதற்குள் உள்ளவற்றை அகற்றி அதில் ஹெரோயின் நிரப்பி சூட்சமமான முறையில் அதனை இணைத்து குறித்த நபர் ஹெரோயின் கடத்தி வந்துள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆரஞ்சுப் பழங்களுக்குள் இருந்து சுமார் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. வெங்காயப் பை ஒன்றில் இருந்த 40 ஆரஞ்சுப் பழங்களில் 12இல் இவ்வாறு ஹெரோயின் இருந்துள்ளது.

கடத்தப்பட்ட ஹெரோயினின் பெறுமதி ஒரு கோடி ரூபா எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி, சந்தேகநபர் உறுது மொழியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.



பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து வந்த விமான் நேற்று இரவு 8.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அதன்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்தே இலங்கைக்கு அதிகம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.