சமூக ஊடகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தீர்மானம்!!

573

சமூக ஊடகங்கள்..

சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பில் வெளியாகும் உண்மைக்கு புறம்பான தகவல்கள், மத சமூக விடயங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துதல் போன்றவற்றினை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.

குறித்த கண்காணிப்பு பணிகளுக்காக 3000 பேர் பணிகளில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர். சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்த பின்னர் அவற்றை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் முகநூல் போன்ற உரிய நிறுவனங்களின் கவனத்திற்கு அவற்றை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்கள் குறித்து துரித நடவடிக்கையை எடுப்பதற்கு முகநூல் இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.