பூச்சிகள்..
திருகோணமலை மாவட்டத்திற்கு தும்பி இனத்தை சேர்ந்த பூச்சிகள் படையெடுத்துள்ளதை காண முடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கரையோரப் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் நேற்று மாலை முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான குறித்த பூச்சிகள் பறப்பதாகவும் தெரியவருகிறது.
திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து புல்மோட்டை வரையான கடற்கரையோரங்களில் அவற்றை காண முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரைச்சல் போன்ற ஒலியை எழுப்பிய வண்ணம் அவை பறப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.