கொழும்பில் திடீரென பற்றி எரிந்த மோட்டார் வாகனம்!!

529

மோட்டார் வாகனம்..

கொழும்பு வோட் பிலேஸில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகனம் திடீரென தீப்பற்றியுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாலை 4.13 மணியளவில் மோட்டார் வாகனம் இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீணை முழுமையாக கட்டுப்படுத்திய போதிலும் மீளவும் அந்த வாகனத்தை பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.