களனி பல்கலைக்கழகத்தில் கஞ்சாவுடன் 13 மாணவர்கள் கைது!!

434

Arrestedகளனி பல்கலைக்கழகத்தில் கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட பொலிஸார் நேற்று (10) மாலை குறித்த மாணவர்களை கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக ஒழுக்காற்று குழு வழங்கிய தகவலை அடுத்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கலை மற்றும் வணிகப் பிரிவு மாணவர்கள் 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் இருந்து 13 கஞ்சா சுறுட்டுகள் மீட்கப்பட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.