மட்டக்களப்பில் மின்சாரம் தா க் கி இரு விவசாயிகள் உயிரிழப்பு!!

731

மின்சாரம் தா க் கி…

மட்டக்களப்பு – உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளில் இருந்து வேளாண்மையை பாதுகாக்க ச ட்டவிரோ தமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு இரு விவசாயிகள் உ யிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உன்னிச்சை, கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய முனிச்சாமி தங்கையா , 7 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிகளே இவ்வாறு உ யிரிழந்துள்ளனர்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள வயல் பிரதேசத்தில் வழமைபோல வேளாண்மை காவலுக்கு சென்றுள்ள நிலையில், வயல் பகுதியில் யானைக்காக சட்டவிரோதமாக வேளாண்மை உரிமையாளர்கள் மின்சார வேலியை அமைத்துள்ளனர்.

இந்த மின்சார வேலியில் பாய்ந்த மி ன்சாரத்தில் சி க்குண்டு இரு விவசாயிகள் உ யிரிழந்துள்ளனர். இதன்போது உ யிரிழந்தவர்களின் சடலம் பிரேத ப ரிசோ தனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.