வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பகிஸ்கரிப்பு போராட்டம்!!(படங்கள்)

312

வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றினை நடத்தினர்.

வவுனியா பொது வைத்தியசாலையின் முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் போராட்டத்தில் 6-2006 சுற்றறிக்கையை சரியாக அழுல்படுத்து, சகல தற்காலிக மற்றும் அமய ஊழியாகளை நிரந்தரமாக்கு, 8 மணித்தியால காலவரையறைக்கு மேலதிகமாக கடமைக்கான உரிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல், சீருடை கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்குதல் உட்பட 9 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.

ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டமானது தைமாதம் 16ஆம் திகதி தாம் மேற்கொண்ட போராட்டத்திற்கு எவ்வித தீர்வும் வழங்கப்பாமையினாலேயே மீண்டும் இக் கேரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை இடம்பெற்ற இப் போராட்டத்திற்கு உரிய பலன் கிடைக்காத பட்சத்தில் தாம் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

-படங்கள் பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 5 6