எனது ஆசைகளை புறந்தள்ளி அரசியலில் ஈடுபட்டுள்ளேன் : ஹிருணிகா!!

440

Hirunika26 வயதான யுவதி என்பதால் எனது வயதுக்கு ஏற்ற வகையில் களியாட்டங்களில் ஈடுபட ஆசை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

நான் இன்னும் 26 வயதான யுவதி. 26 வயதான யுவதி என்பதால் எனக்கும் நண்பர்களுடன் வெளியில் செல்ல, மகிழ்ச்சியாக இருக்க ஆசை இருக்கின்றது.

ஆனால் அவை அனைத்தையும் விட்டு விட்டு, அரசியலை தேர்ந்தெடுத்தேன். எனது தந்தையின் அரசியல் அவரால் செய்ய முடியாது போன மற்றும் தவறிய பணிகளை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.