யாழில் கார் கதவினை திடீரென சாரதி திறந்ததால் ஏற்பட்ட விபரீதம்!!

945

யாழில்..

யாழ். நல்லூர் கோவில் வீதியில் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபரொருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் தலையில் காயமடைந்த நிலையில் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த சாரதி அவதானம் இல்லாமல் திடீரென கார் கதவினை திறந்ததால் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது கார் கதவுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் தலையில் படுகாயமடைந்து மயக்கமுற்றுள்ளார். தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுன்,

குறித்த விபத்தினை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரர் தி.பரமேஸ்வரன் என தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.