பூநகரி பகுதியில் விபத்து : பல்கலைக்கழக மாணவர் பலி!!

2518

விபத்து..

கிளிநொச்சி- பூநகரி பகுதியில் இன்று (05.07.2020) காலை டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மொறட்டுவை பல்கலைக்கழக இறுதிவருட மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல உடற்கல்வி ஆசிரியர் மோகனின் மகனான மோ.ஆகாஸ் என்ற
பல்கலைக்கழக மாணவரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவனுமானார்.