இராட்சத மீன்..
நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் கடலில் இன்று காலை கரைவலை மீனவர்களின் வலையில் 15 அடி நீளமான இராட்சத சுறா மீன் சிக்கியுள்ளது.
சுமார் 1500 கிலோகிராம் நிறையையுடைய குறித்த இராட்சத மீனானது கொடுப்புளி சுறா இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். அந்த மீன் வலையில் சிக்கியதால் உழவு இயந்திரத்தின் உதவியைக் கொண்டு வலையானது கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த இடத்திற்கு வந்த கடல் தொழில் மீன்பிடி அதிகாரசபை அதிகாரிகள் மீனை மீண்டும் கடலில் விடுமாறு பணித்துள்ளனர்.
அத்துடன் அண்மைக்காலமாக இது போன்ற இராட்சத மீன் இனங்கள் அம்பாறை உள்ளிட்ட இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் மீனவர்கள் வலையில் சிக்குவதுடன், கரை ஒதுங்கியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.