இலங்கையில் திருமணங்கள் தொடர்பில் தளர்த்தப்படும் கட்டுப்பாடு!!

783

திருமணங்கள் தொடர்பில்..

திருமண நிகழ்வுகளில் கலந்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 300 ஆக அதிகரிக்க முடியும் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அப்படி இல்லை என்றால் திருமண மண்டபத்தின் ஆசன எண்ணிக்கையில் நூற்றுக்கு 50 வீதமான விருந்தினர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.