84 வயதான பெண்..
கொரோனா நிதியத்திற்காக 2 இலட்சம் ரூபாய் நிதியை 84 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வழங்கியுள்ளார். அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பெற்றுள்ளார்.
புத்தளம், காக்காபள்ளி, மாங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு நிதியை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதற்கமைவாக நேற்றையதினம் புத்தளம் மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டார். அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதியிடம் 2 இலட்சம் ரூபா நிதியை குறித்த பெண் ஒப்படைத்துள்ளது.
5 ஆயிரம் நாணயங்கள் அடங்கிய பணத்துடன், “சட்டம், நீதி மற்றும் தர்மத்தை பாதுகாக்கும் அரசாங்கம் – தன்னிறைவான நாடு ஒன்றை எங்களுக்கு கொடுங்கள்” என குறிப்பிட்டு அவர் இந்த நிதியை வழங்கியுள்ளார்.