கட்டாரில் படுகொ லை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் : வெளியாகியுள்ள முக்கிய தகவல்!!

1367

கட்டாரில்..

கட்டாரில் இலங்கை குடும்பம் ஒன்று படுகொ லை செ ய்யப்பட்ட நிலையில் நேற்று உ யிரிழந்த மூவரினதும் ச டலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ப டுகொ லை சம்பவம் தொடர்பில் உ யிரிழந்த பெ ண்ணின் கா தலன் மீது ச ந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

59 வயதுடைய தந்தையும், 55 வயதுடைய தாயும் 34 வயதுடைய மகளுமே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் சடலம் நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

களனி பகுதியில் வசிக்கும் குடும்பமே இவ்வாறு ப டுகொ லை செ ய்யப்பட்டுள்ளதாக தெ ரிவிக்கப்பட்டுள்ளது. ச டலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

59 வயதான மகேந்திரராஜ் லோகிதாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் சென்றுள்ளார். இந்நிலையில், கத்தாரில் இலங்கை இளைஞரை உ யிரிழந்த 34 வயதான பெண் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கண்டியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மார்ச் முதலாம் திகதி உ யிரிழந்த பெண்ணுக்கும் அவரது காதலருக்கும் இடையில் த கராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்த நபர் தனது காதலி, அவரது தாய் மற்றும் தந்தையை கொ லை செ ய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கொ லை செய்யப்பட்ட பின்னர் அந்த நபர் நாடு திரும்பியதாக முதற்கட்ட வி சாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொ லை செய்யப்பட்ட சுமார் நான்கு நாட்களுக்கு பின்னர் ச டலங்கள் மீ ட்கப்பட்டன, மேலும் கொ ரோனா தொற்று நோய் காரணமாக ச டலங்கள் இலங்கைக்கு கொண்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் மகள் தனது ச கோதரியின் காதலன் மீது ச ந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க விமான நிலைய பொலிஸார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.