கொழும்பில் விற்பனை செய்யப்பட்ட உணவில் உக்காத பொலித்தின் : பேஸ்புக் பதிவால் சர்ச்சை!!

610

உணவில் உக்காத பொலித்தின்..

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்பட்ட Chicken Sausages பக்கட்டில் இருந்த Sausages ஒன்றுக்குள் பொலித்தின் துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.

பிரபல ஊடகவியலாளர் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அவர் சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டடுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி மாலை கொள்வனவு செய்யப்பட்ட Sausages பக்கட்டில் இந்த பொலித்தின் துண்டு காணப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகப்பெரிய நிறுவனத்தினால் இந்த Sausages தயாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நம்பி கொள்வனவு செய்யததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறியவர்களுக்கு உணவு வழங்கும் போது இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அதனை உறுதி செய்யும் வகையில் Sausages புகைப்படங்களையும் அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.