இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!

816

கொரோனா..

நாட்டில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களுள் 56 பேருக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த நபர் கடந்த மூன்று மாதக்காலமாக கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்க உட்படுத்தப்பட்ட நபராவார்.

இதேவேளை, இன்று காலை மாரவில பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இணங்காணப்பட்டுள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.