கொரோனா..
கடந்த காலங்களில் கந்தகாடு போ தைப்பொ ருள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்த கைதிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த 119 உறவினர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்த நபர்களை பார்ப்பதற்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய காலப்பகுதியில் அனுமதி கிடைக்கவில்லை எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சேனபுர பிரதேசத்தில் 144 பேரும் ஹெதல வைத்தியசாலையில் மேலும் 50 பேருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஹெதல பிரதேசத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் போ தைப்பொ ருளுக்கு அடிமையான நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக கந்தகாடு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.