கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் திகதி மீண்டும் மாற்றம்!!

1029

கட்டுநாயக்க விமான நிலையம்..

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என விமான நிலையம் மற்றும் சேவையின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் திறக்கப்படும் திகதி ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதனை கருத்திற் கொண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பின்னர் ஒரு நாள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் திறக்கப்படும் உரிய திகதியை இன்னமும் அறிவிக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளதாக ரஜீவ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.