இலங்கையில் கொரோனா தீவிரம் : பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சு அறிவிப்பு!!

1823

கொரோனா தீவிரம்..

நாட்டின் நிலைமை மோசமானால் அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமையை உறுதிப்படுத்தும் விதமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கல்வி அமைச்சு தீவிர அவதானத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.