பல இடங்கள் சுற்றி திரிந்த கொரோனா நோயாளி : அச்சத்தில் மக்கள்!!

1195


கொரோனா நோயாளி..



கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தங்காலை பட்டிபொலி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட உறவினர்கள் உட்பட 7 பேரும் வர்த்தக நிலையங்கள் இரண்டின் உரிமையாளர்கள் உட்பட 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



இந்த நபர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றியவர் என காலி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் விடுமுறை பெற்று கடந்த 5ஆம் திகதி தங்காலை வீட்டிற்கு வந்துள்ளார். அவர் பல நாட்களாக நகரின் பல இடங்களுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




இதன் காரணமாக அவர் பயணம் செய்த இடங்களில் இருந்த நபர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பல இடங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.