ஐ.பி.எல் 07 இல் ஏலம் போகாத இலங்கை வீரர்கள் : யுவராஜ் சிங்கிற்கு அதிகபட்சமாக 14 கோடி!!

413

SL players

இலங்கை அணியின் முக்கியத்துவம் மிக்க வீரர்களான மஹெல ஜெயவர்த்தன, திலஹரத்ன டில்ஷான், அஜந்த மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெததியூஸ் ஆகியோரை இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியினரும் எடுக்க முன்வரவில்லை.

அத்துடன் நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் ரோஸ் டெய்லரும் ஏலத்தில் எடுக்கப்படாதது ஆச்சரியமே.

இன்று இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 7 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் ஏலம் போகாத முக்கிய வீரர்கள் விவரம் வருமாறு..



அசார் மமூத் (பாகிஸ்தான்), முரளி கார்த்திக் (இந்தியா), பிரவீன்குமார் (இந்தியா) , அஜந்த மெண்டிஸ் (இலங்கை), ரொபின் பீட்டர்சன் (தென்னாபிரிக்கா), நாதன் மெக்குல்லம் (நியூசிலாந்து), திலஹரத்ன டில்சான் (இலங்கை).

முக்கியமாக முரளிதரன், திஷர பெரேரா தவிர வேறு எந்த இலங்கை வீரர்களும் இன்று ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக யுவராஜ் சிங் 14 கோடி இந்திய ரூபாய்க்கும் தினேஷ் கார்த்திக் 12 கோடி ரூபாய்க்கும் விலை போயுள்ளனர்.