வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!!

310

Trainவவுனியா வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.