வாகன விபத்தில்..

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி, மாவடிச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று(17.07.2020) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை, மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் 19 வயதுடைய நாஸர் நஜாத் என்ற இளைஞரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் மட்டக்களப்பு பகுதியில் இருந்து பொலனறுவை பகுதிக்கு சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தில் மோதி ஏற்பட்ட விபத்திலே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துடன் தொடர்புபட்ட வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.






