தனியார் பேருந்து மற்றும் வான் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் காயம்!!

982

விபத்து..

அம்பாறையில் தனியார் பேருந்து மற்றும் வான் என்பன நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதமுனை பிரதான வீதியில் நேற்று(19.07.2020) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தனியார் பேருந்து பகுதியளவில் சேதமடைந்ததுடன் வான் முற்றாக சேதமடைந்துள்ளது. இதன்போது வானில் பயணம் செய்த நால்வர் காயமடைந்த நிலையில்,

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.